உயிரை பறித்த லேப்டாப்.. சார்ஜ் செய்ய முயன்ற பெண் மின்சாரம் தாக்கி பலி..!

 


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் லேப்டாப் சார்ஜ் செய்ய முயன்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் கோவையை சேர்ந்த பெண் டாக்டர் சென்னையில் இதேபோன்று பலியான நிலையில் தற்போது விருதுநகரிலும் இன்னொரு பெண் பலியாகி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமம் என்பது தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் செந்திமயில். இவர் இன்று தனது வீட்டில் லேப்டாப்பை சார்ஜ் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி தரையில் விழுந்தார். இதை பார்த்ததும் குடும்பத்தினர் ஓடிவந்து வந்து அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது ஏற்கனவே செந்திமயில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதாவது மருததுவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

December- 7- 2024

December- 7- 2024
Award Function

Contact Us

Name

Email *

Message *

Powered by Blogger.